யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Thursday, December 24, 2009

Golden Words

”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!









”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்










”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்

இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க....?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க...?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க...?

ஏன் சார் ஏன்....

இத்த தான்...

திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
...

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..

Sunday, December 13, 2009

Life Lyric

நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

My Lyrics

சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.

Sunday, December 6, 2009

One Day


ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி

Thurumbu

வள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு.

Kaalam

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

Tuesday, December 1, 2009

Natpu kavithaigal

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே.....

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது

Monday, November 30, 2009

Manitha..


ஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?

Tamil Lyric

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

Yenn nanbanin Puthakam

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.

Sunday, November 29, 2009

Yathavathu Sei

ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.

Thaanam

நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம் அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.

Life Is Short

உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

Thursday, November 26, 2009

Vazkkai Tattuvam

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

Onine Tamil Lyrics

இரவு என்பது பகலின் நிழல்,
காதல் என்பது கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட நிஜமாக இருப்பது இனிமை..

New Lyric

சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்

Sleeping Time

ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.

Manathil Nimmathi

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

Tuesday, November 24, 2009

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக்
கிராமத்தின் தலைவருக்கு ஒரு
பெண் இருந்தாள்..அவளைப் போல்
ஒரு
அழகிய பெண்னை யாரும்
பார்த்ததும் இல்லை

கேட்டதும்
இல்லை.அந்தப் பெண் பக்கத்து
கிராமத்தைச்
சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்
காதலிக்க ஆரம்பித்து
விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த
கிராமமும் அந்தக் காதலை
எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்
வேறு வழி
தெரியாத காதல் ஜோடி ஊரை
விட்டு ஒட

தீர்மானித்து ஒரு
நாள் யாருக்கும் தெரியாமல்
காணாமலும் போய்விட்டனர்.

உடனே
ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்
தேடியது. இருந்தும் அவர்களால்
கண்டு பிடிக்கவே
முடியவில்லை.
  
அதன் பிறகு அவர்கள்
 அந்த்க்
காதலை ஏற்றுக் கொள்ள முடிவு
செய்து செய்தித்தாளில்
விளம்பரமும்
கொடுத்தனர்.அதைப்
 பார்த்த
காதல் ஜோடி உடனே ஊர்
திரும்பியது. சந்தோஷப்
பட்ட
ஊர் மக்கள் அந்தக்
காதல் ஜோடிக்கு பிரமாண்டமான
முறையில்
 திருமணம் செய்ய
முடிவு
செய்தனர்.
 திருமணத்திற்குத் தேவையான
பொருட்களை
 வாங்க
நகரத்திற்குச்
சென்றிருந்தனர்.அப்போது
எதிர்பாராதவிதமாக ஒரு லாரி
மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்
எதிரிலேயே
 உயிர்

துறந்தான்.
உடனே அந்தப் பெண்னும்
 மனநிலை
பாதிக்கப்பட்டாள்.
 ரொம்ப நாட்களுக்குப்
 பிறகு
நினைவு திரும்பிய அந்தப் பெண்
குடும்பத்தினருடன்
 வசித்து
வந்தாள். திடீரென்று ஒரு நாள்
அப்பெண்னின் தாய் ஒரு கனவு
கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள்
மகள் அவளுடைய
 காதலன் நினைவாக
வைத்திருக்கும் உடையில்
இருக்கும்
இரத்த்க் கறையை
உடனே துவைக்க வேண்டும்
என்றது,இல்லா விட்டால்
 மோசமான
விளைவுகள்
ஏற்படும் என்றும் எச்சரிக்கை
செய்தது.
 அவள் தாய் கனவை மதிக்கவில்லை.
அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின்
தந்தையிடமும்
கனவில்
எச்சரித்தது.ஆனால் அவரும்
அதைக் கண்டு
கொள்ளவில்லை
  அடுத்த நாள் அப்பெண்னின்
கனவிலேயே தோன்றி
எச்சரித்தது.அவள் உடனே
தாயிடம் கனவைப்
பற்றிக்
கூறினாள். அதன் பிறகே அதன்
முக்கியத்துவம்
உணரப்பட்டது.அவள் தாய் அதை
துவைக்கக் கூறினாள்.
உடனே அந்தப் பெண்னும்
 அதைத்
துவைத்தாள்.
இருந்தும் தேவதை
மறுபடியும் அடுத்த நாள்
கனவில்
வந்து கறை சரியாகப்
 போகவில்லை
என்று
 எச்சரித்தது.
மறுபடியும்
அப்பெண்
அத்துணியைத்
துவைத்தாள்.இருந்தும்
கறை
போகவில்லை.
 அடுத்த நாள் காலையில்
அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்
பெண்
கதவைத்
திறந்தாள்.அப்போது கனவில்
வரும் அதே பெண் நின்று
கொண்டிருந்தாள். அவள் முகம்
கனவில் வருவதைப் போல் கனிவாக
இல்லாமல்
வெளிறிப் போய் இருந்தது.உடனே
இவள் பயத்தினால்
அலறினாள்.
  அந்தத் தேவதை கோபத்துடன்
கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்
எக்ஸல் போடு கறை போயிடும்"
என்றது.
  இதைப் படித்ததும் உடனே

என்னை
உதைக்கத் தோணுமே உங்களுக்கு!
நானே இதை எனக்கு
அனுப்பியவரைத்
தேடிக்கிட்டு இருக்கேன்

Sunday, November 22, 2009

Time

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்

Kadhal Tholvi

நான் இப்பொழுது.....................

plz ஒரே ஒரு தம் அடிச்சுக்கறேன்....
நேற்று
உன்னை கெஞ்சி கூத்தாடி
நீ கடை கண்ணால் கோபம் காட்டி
அனுமதித்த பொழுது கிடைத்த சுகம்

பாக்கெட் பாக்கெட்டாய்
குடித்து பார்த்தும் கிடைக்கவில்லை!

விட்டு விட்டேன் தம் அடிப்பதையே!

நேற்று
ஏதோ ஒரு போய் சொல்லி
நீ சிறுக சிறுக சேமித்து வைத்ததை
மொத்தமாய் பிடுங்கி போய்
தண்ணி அடித்த சுகம்

இப்போது

நினைத்தால் மதுகடையே
வாங்கும் தகுதி இருந்தும்
முடியவில்லை சுத்தமாய் !!!

அவசர தேவைக்கு
நான் நிற்கும் வங்கி
காதலுடன் நீ கழற்றி தரும் உன் நகைகள்!!!!!!!!!
நேற்று
அருவருப்பாய் நான்
வாழ்ந்த பொழுது முழு காதலுடன்
என் பக்கம் இருந்தாய்........................

இப்போது
அர்ததமாய் வாழ்கிறேன் முடிந்த வரையில்
நீயும் இல்லை! காதலும் இல்லை!!

என்னதான் ஜெயித்தாலும்
உன்னை விட்ட பிறகு தான்
உருப்பட்டேன் என்று இந்த குருட்டு உலகம்
சொல்வதில் வலிக்கிறது மொததமாய் !!!!!!!!!!

யாருக்கு தெரியும்
என்னை பெற்றவள் தாயென்றாலும்
ஆளாக்கியவள் நீயென்பது ...................

Wednesday, November 18, 2009

Kathaliyin Kalyana Parisu

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்லா மூக்குமுட்ட சாப்டு மொய் எழுதாம ஓடிவந்துடலாம் மாமு......

Naal Kaattium kathalium

நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே...

Tuesday, November 17, 2009

Natpu Kavithai

வானம் அழகானது தான்
வெளிச்சமாய் இருக்கும் வரை

காற்று அழகானது தான்
தென்றலாய் இருக்கும் வரை

நெருப்பு அழகானது தான்
தீபமாய் இருக்கும் வரை

நீர் அழகானது தான்
நிலையாய் இருக்கும் வரை

பூமி அழகானது தான்
பொறுமையாய் இருக்கும் வரை

நட்பு அழகானது தான்
காதல் வராத வரை

The Real Lyric

அன்பைக்கொடு, உதவியைக் கொடு,

உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு.

ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது

Wednesday, November 11, 2009

Natpin Unarvukal

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும் !


"உன் அன்பு மட்டுமே
என் நேசிப்பு ...
உன் வார்த்தை மட்டுமே
என் கவிதை ...
உன் பார்வை மட்டுமே
என் வெட்கம் ...

Natpu Kavithaigal

நட்புசிறகுகள் கிடைத்தவுடன் பறப்பது நட்பு அல்ல ,
சிலுவைகளே கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு,
என்றும் நட்புடன் அனு

Tuesday, November 10, 2009

வாழ்த்து மடல்

கடலே உன்னை பார்க்கிறேன்,
கரைக்கு முன்னால்.
உன் வாழ்க்கையை,
அலையும் கரையும்மாய்....................

வானமே உன்னை நினைக்கிறேன்,
பூமிக்கு கிழ்யே.
உன் வாழ்க்கையை,
மேகமும் காற்றுமாய்...............

சூரியனே உன்னை தரிசிக்கிறேன்,
காலை வேலையில்,
உன் வாழ்கையை.
இரவும் பகலும்மாய் ..............

நிலவே உன்னை பாடுகிறேன்,
இரவு நேரத்தில்,
உன் வாழ்கையை.
தாயும் சேயும்மாய் ...................

திருவள்ளுவரே உன் புகழ்யை கேட்கிறேன்,
என்றும் என்னளிலும்,
உன் வாழ்கையை.
ஆசிரியரும் மாணவனும்மாய் ................

மனிதனே உன்னை மணகோலத்தில் சந்திக்கிறேன்,
துன்பத்தை மறந்து,
உன் வாழ்கையை.
மணமகனும் மணமகளும்மாய்......

துன்பத்தை அணுவாய் உடைத்தெறி,
இன்பத்தை வள்ளலாய் பகிர்ந்தளி,

Kathaliyin Kadai Kan Parvai

புன்னகை செய்
தப்பில்லை.
ஆனால்
நான் சாலை கடக்கும் போது
வேண்டாமே,
கால்களுக்குக் கட்டளையிட மறந்து
மூர்ச்சையாகிறது
மூளை.

ஒவ்வொரு பாராட்டிலும்
கன்னம் சிவக்கும்
என் கவிதை,
உன் வெட்கத்தின் முன் மட்டும்
வெட்கித் தலை குனிக்கிறது.

உனைப்பார்க்கும் வரம் கொடு
கவிதை படிப்பதை
கிடப்பில் போடுகிறேன்.
உன்னுடன் பேசும் வரம் கொடு
இசைப்பேழையை
இருட்டில் வைக்கிறேன்.
உன் விரல் தீண்டும் வரம் கொடு
ஓவியம் வரைவதை
ஒத்தி வைக்கிறேன்.
நீயோ,
என் தவத்தை ரசிப்பதற்காகவே
வரம் தர மறுக்கிறாய்.

எந்த ஆடை அழகென
கேட்கிறாய்,
எந்த பூ எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி
கேட்பதாய்ப் படுகிறது
எனக்கு.

உனக்குப் பிடித்த ஆடையின்
வண்ணம்
கருப்பு என்று
தோழி சொன்னாள்.
என்கிறப்போது
முகம் பார்க்கும் கண்ணாடி
முக்கியமில்லாமல் போய்விட்டது

அன்பே

Love Feelings

"அவள்!..திட்டிவிட்டு...
சென்றால் கூட!....
சிரித்து கொண்டு இருந்திருப்பேன்!....
ஆனால்,அவளோ!...
சிரித்து விட்டு போய் விட்டாள்!...
அதான்,இன்னும்,
'சிந்தித்து' கொண்டுருக்கிறேன்"....

Sunday, November 8, 2009

New Thirukural

உன் ஓர விழி பார்வையில் என் உயிர் உருகி போனது....,
உன் கை பிடித்து நடக்க காலமெல்லாம் காத்திருக்க தோன்றியது.....
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க என் பசியே ம(றை)றந்து போனது,
நீ உண்ணும் உணவாய் நான் மாற தோன்றியது....,
உன் கண் என்னும் கணையால் என் மனதை தாக்கினாய்,,,,
உன் புன்னகையால் என் புண்பட்ட நெஞ்சமும் புகைஇன்றி ஆறியதே....,
என் காதலியே.....,
என்னவளே......
வள்ளுவன் காதலித்து இல்லை போலும்....,
இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்......,
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே என்னவளே,
உன் விழியால் சுட்ட வடு.........,

Teriyuma Ungalukku

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....
நட்புக்கு அது தேவையும் இல்லை...
எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
இங்கே சந்தித்துக்கொண்டோம்....
காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..
நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..
இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...
இருந்தும் உறவாடினோம்...
பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...
அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..
அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...
மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...
இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

Sunday, November 1, 2009

Wife's Prayer

இன்று உனக்கு காதலி இல்லை என்று வருதபடதே ...!!!!
இது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாக கூட இருக்கும் .,.,.

i like too so much

Beautiful Tamil Lyrics

"நான் சாம்பலானாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீது
உனக்காக
சில பூக்கள் பூக்குமே "

+*+*+*+*+*+*+*++*+*+*+*+*+*

பிரிவை
தாங்கும் சக்தி எனக்கில்லை,,,,,,,,,,,,,
என்னை
கேட்டால் பிரிவே இல்லாத உலகம் வேண்டும் என்பேன்,,,,,,
ஒவ்வொரு உறவிலும் அன்பின் பிணைப்பு இருப்பதால்,,,,,,,,,,,
அன்பே யாவிலும் பலம் என்று சொல்வேன்,,,,,,,,,,,,,,,

*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*

அன்பான புன்னகை வாடிய மனதையும் மலர வைக்குமாம்,,,,,,,,
ஒவ்வொரு விடியலையும் புன்னகையோடு மலர விடுங்கள்,,,,,,,,,,,
அவ்வாறு செய்தால் துன்பம் கூட நம்மை நெருங்க தயங்கும்,,,,,,,,,,

Tamil Lyrics

கவிதை எழதும்
மனிதன்
கவிஞன் ஆகுகிறான்.......

யார்?
என்று கேள்வி
கேர்ப்பவன் அறிவளியகிறான் ...............

உயிர்க்கு
பயத்தவன்
உண்மையை மறைக்கிறான் .........

மானத்திற்கு
பயந்தவன்
உயிரை விடுகின்றான்

தமிழ்க்கு
அடிமை
கவிதை ............

கவிதைக்கு
அடிமை
கவிஞன்.................

நாளுக்கு
நாள்
கிழமை அடிமை .......

நீ உன்
உடபிற்கு
அடிமை ............

உயிர்
நட்புக்கு
அடிமை................

நண்பன்
எனக்கு
அடிமை ............

நான்
உனக்கு
அடிமை .......

Kathalithu Paar

வானம் வசப்படும் பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும் எந்த இடத்திலும்
காதலியின்

மனம் வசப்படும் என்று சொல்லவில்லை

எனக்காக எதையும் தியாகம் செய்.

ஆனால்


எதற்காகவும் என்னை
தியாகம் செய்துவிடாதே என்றாய்.

இப்பொழுது "எதற்காக"
என்னை தியாகம் செய்தாய்?

ஒவ்வொரு
முறையும் உன் வாசலை கடக்கும்போது

உன்

கொலுசொலி
சொல்லும் சங்கேதம் புரிவதில்லை
எனக்கு.

காதலால்
கசிந்துருகி கால்கடுக்க நின்று
எவ்வளவோ பேசினாலும்

நீ
பதிலாகத் தரும் மௌனத்திற்கு
அர்த்தம் விளங்குவதில்லை
எனக்கு!

என்னவளே

என்னவளே.......!

எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்.......!

உன் இமைகளாகச் சொன்னான்...!
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன் ....!!

கண்களாகச் சொன்னான்...!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்.....!!

உன் கூந்தலாகச் சொன்னான்...!
உன் முகம் மறையுமே என்று மறுத்து விட்டேன்....!!

உன் உயிராகச் சொன்னான்...!
பிரிந்து விட்டால் ,இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன்....!!

பின்பு தான் ..........

உன் இதயமானேன்.....!
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு...............

Friday, October 30, 2009

உலகம் உன் கையில்

"நண்பனையும் நேசி "

"எதிரியையும் நேசி "

நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,

எதிரி உன் வெற்றிக்கு காரணமாய் இருப்பான்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

.முடியும் வரை முயற்சிசெய் ,

உன்னால் முடியும் வரை அல்ல ,

நீ நினைத்து முடியும் வரை .........!"

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

வெற்றி" பெற வேண்டும் என்று நினைத்து போராடாதே ,

"தோல்வி" அடையகுடாது என்று நினைத்து போராடு ,

" உலகம் உன் கையில் "

Thursday, October 29, 2009

Natpu Kavithaigal

சின்னதாய் ஒரு புன்னகை
மென்மையாய் ஒரு பார்வை
இது போதும்
நட்பு உரசிக் கொள்ள...

மறக்க முடியாத துயரம்
போகத் துடிக்கும் உயரம்
இது போதும்
நட்பு பேசிக் கொள்ள...

ஆக்கப்பூர்வ விமர்சனம்
ஆழமான ஆலோசனை
இது போதும்
நட்பு நலமாய் நடந்து செல்ல...

சின்ன சின்ன சண்டை
செல்ல செல்ல கோபம்
இது போதும்
நட்பை உணர்ந்து கொள்ள...

எப்போது இந்த எல்லைக்குள்வருவாய்?
எல்லையில்லா நட்பைத் தருவாய்?
காத்திருக்கிறேன்
காற்றினூடே.....

என் வார்த்தைகளுக்கே
விளக்கம் கேட்கும்
பலருக்கு மத்தியில்
என் மௌனத்தையும் மொழிபெயர்க்க
உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது

Sunday, October 25, 2009

Tamil

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
"Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன்
"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன்
"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...!
" அம்மா" என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

Tamil Mannin Mynthan

தமிழன் எங்கும் சாகிறான்
சாகும் முன் ஜீவா சொன்னார்
எதையுமே புரிந்து கொள்ள முடியாத
மன் ஆந்தை களாக பொய் விட்டோமே என்று
அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்
மது வும் போதை மருந்தும்
டிவி கிளப் மொபைல் போன்றவை முன்னால்
பிட்சை எடுக்க வேண்டும்
பல நூறு ஆண்டு காலம் முன்னால் நம்
முன்னோர்கள் குடி காக்க நம் குலம் காக்க
இன்னுயிர் நீத்து மட்டுமன்று
தம் வாழ்நாள் முழுக்க கண்களில் வெறி ஏந்தி
மார்பினில் வேலே ஏந்தி
காத்த தமிழ் மானம் இன்று காற்றில் பரகிரதே
நாம் எல்லோரும் நம் வீட்டு பெண்கள் மானபங்கப்படுத்த
படும்வரை காதிருபோமா
அல்லது அப்பொழுதும் அதையும் கண்டு ரசிக்கும்
உன்னத நிலையை அடைந்து விட்டோமா ?
ஐய்யய்யோ வாழ்வு இனிக்கலையே
என்னால் இயலையே
நான் செத்து ஓழியும் நாள் என்னாளோ அந்த திருநாளோ

Monday, October 12, 2009

அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும்வேளை காயங்கள் மறந்திடு அன்பே

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் ஏன் அன்பே அன்பே

காலங்களோடும் இது கதையாகிபோகும் என் கண்ணீர் துளிஇன் ஈரம் வாழும்

தாயாக நீதான் தலை கோத்த வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்...

என் வாழ்கை நீ இங்கு தந்தது அடி உன்னட்கள் நான் இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை....

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே....

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே... அன்பே..

Saturday, October 10, 2009

Tamil Natpu Kavithaigal

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......

ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு

Best Friendship Tamil Lyrics

படித்து படித்து
நெஞ்சம் பரவித்து போனது !
நினைத்து நினைத்து
நெஞ்சம் சுமை தாங்கியது !
உன் நினைவுகளில்
நான் பசியாறிக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும்
நான் படித்து பார்த்தாலும்
புத்தும் புதிய
வரிகளாக என் இதயத்தில் நிலவதேன்னே !
சந்தோஷ கனவுகளில் என்னை
மிதக்கவைத்த நண்பரே
நானாக நானில்லை
நீ என்னுள் உருவாகி உறவானப் பின் ....!
என் நட்புடன் கலந்த உங்கள் அன்பிற்கு என்ன தவம் செய்தேன்

Anbe.. Anbe Tamil Kathal Kavithaigal

காதல்

காதல் அழவும் வைக்கும்!

அலையவும் வைக்கும்!

அழியவும் வைக்கும்!

அன்பை பொழிய வைக்கும்!

அகந்தையை புரியவும் வைக்கும்!

காதலில் ஊடல் இருக்கலாம்,

சாடல் இருக்க கூடாது!

மனதால் ஒத்து போகலாம்!

பணத்தால் பிரிய கூடாது!

பணத்தால் வரும் காதல்

குணத்தால் பயனற்று போகும்

Valkkai Attiyayam Tamil Lyrics

Friday, October 9, 2009

இதுதான் நட்பு.

கவிதை என்பது யோசிப்பது!

காதல் என்பது நேசிப்பது!

நட்பு என்பது சுவாசிப்பது!

யோசிக்காமல் இருக்கலாம்...

நேசிக்காமல் இருக்கலாம்...

ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இதுதான் நட்பு.....

நட்பே... நீ எனக்கு நட்பாக வேண்டும்

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்..

Uyir Kavithai

என்னை புரிந்தவர்கள் என்னை பிரிந்ததில்லை ..
என்னை பிரிந்தவர்கள் எல்லாம் என்னை புரிந்து கொள்ளதவர்கள்......

Sunday, October 4, 2009

Tamil Good Friend Lyrics

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!
என்றும் உங்கள் நல்ல நண்பன் தங்கம் !

Yanathu Neasam

எனது நேசம்

பற்றற்று வாழ நினைத்தேன்
உன்னை பார்க்கும்
முன்பு வரை..
ஏனோ இன்று
பற்று வந்து என்னை பற்றி
கொண்டுவிட்டது.
என்னை அறியாமல்

உன்மீது கொண்ட நேசத்தால்.
உன் மீது கொண்ட
பாசமெல்லாம்
வெறும் வேஷம் என்று
எண்ணிவிடாதே.

உன் மீது ஆனா
என் நேசமெல்லாம்
எனக்கான தேசம் அது!

நான் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர் துளியும்
என்றாவது ஒரு நாள்
என் நேசத்தை உன்மனத்தில்
துளிர் விட செய்யும்
என்ற நம்பிக்கையில்
என் மனமும்
என் உடலும்
காற்றில் கரையாமல்
காத்திருக்கின்றது

Natpu Kavithaigal

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை

Thedinean.. Lyrics

உங்களிடம் பேசும் வரை என் மனம் என்னிடம்
உங்களோடு பழகியபின் என் மனம் எவ்விடம்...??

தேடினேன்.... தேடினேன்... தேடினேன்
கண்டேன் அதை உங்கள் நட்பின் பூங்காவிலே!!!

உங்கள் நட்பின் ஒளியால் என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின...!
என் கனவு கவிதையாயின...

அன்பு தோழமை நெஞ்சங்களே...!
வெண்மதியை தூது அனுப்பி ஆண்டவனுக்கு
நன்றி கூறுகிறேன் உங்களை எனக்கு தந்தமைக்கு

Friday, October 2, 2009

Kadhal Lyrics

நாலிதழ்கள்!

நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!

Anbu Manam Veesum Lyrics

அன்பு மனம் வீசும்!
என் வேதனை யாவும்
உனக்கு
வேடிக்கையாக போய்விட்டது
தினத்தினம் இது
வாடிக்கையாக நடப்பதால்!

நேசித்துவிட்டது மனசு
பாவம் அந்த மனசுக்கு
தெரியவில்லை
உன்மனம் கல்
என்று
இருந்தாலும் முயற்சிகிறேன்
எறும்பு ஊற கல்லும் தேயிமாமே!!

உன் காலில் கொலுசு
ஒலி கேட்க்க ஆசைபட்டேன்
ஆனால்
இன்று வரை
ஏனோ
கனவில் ஒலிக்கும் ஒலியாகவே!
போய்விட்டது!

என் மனதை
தள்ளிவைப்பதிலும்
தவிக்கவைபத்திலும்
உனக்கு நிகர்
யாரும் இல்லை!

ஆயிரம் முறை
சண்டைபோட்டிருப்பேன்
ஆனால்
ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை
தவிக்க விட்டதும் இல்லை
இந்த மனசால்!

மறவாதே அன்பே
நான் இறந்தாலும்
என் சாம்பலில்
கூட
உனக்கான
அன்பு மனம் வீசும்!

பழகிய நினைவுகள்

பழகிய நினைவுகள்
பழகிய
சில மாதங்காலேயானலும்
ஒரு யுகமாய்
கடந்துவிட்ட எண்ணம்
உனது பிரிவில் கூட
எனக்கு இருந்த
ஒரே ஆறுதல்
கவிதை என்று நான் நினைத்தபோது
வார்த்தைக்கூட வர மறுகின்றது
அதார்க்கு கூட
உன் பிரிவை தாங்க முடியவில்லை
நான் என்னை மறக்கின்ற போதிலும்
ஓரமாய் புன்னைக்கைக்கிறது
ஏட்டில்
உனக்காக நான்
எழுதிய சில கவிதைகள்..........

நம் நட்பு

சிந்திக்குறேன்

சிந்திக்குறேன் ..........
சந்திக்க பல ஆண்டுகள் ஆகலாம் !
அனால் சிந்திக்க ஒரு நொடி போதும் ....
சிந்திக்குறேன் எபோது சந்திப்போம் என்று ??????

ஏ பெண் மனமே

என்

கவிதையெனும்

சிறுதுளியால்

நான் நிரப்ப நினைக்கிறேன்...

கடலெனும் உன் மனதை...!!!

நாளெல்லாம் தனிமையில்....

நாளெல்லாம் தனிமையில்
நான் இருந்த போது
தலையணையாய்
உன் நினைவுகள்
என் தலைசுமந்தன!

நீ செல்லும் பாதையில்
உன் நிழலைபோல
பின் தொடர்ந்தேன்
ஆனால் இன்று
என்னை இருட்டில் நிறுத்திவிட்டு
நீ மட்டும் வெளிச்சத்தில்... செல்கிறாய்!

யாரிடமும் காட்டாத அன்பு
முதன்முதலாய் உனைபார்த்ததும்
வந்தது
என் சந்தோசத்தின் மறு உருவம் நீ!

நான்கு வார்த்தை அன்பாய் பேச
நாள் முழுக்க சண்டை போட்டேன்..
உன்னிடம்
நாளெல்லாம் உனைநினைத்து ...
காத்திருந்த பொழுதுகள்
எல்லாம் ஏமாற்றமே!

கனமாய் போய்விட்டது மனசு
கணக்கில்லா கண்ணீரால்...
வரிவரியை எழுதிய
என்காதல் வார்த்தைகள் எல்லாம்
கானல் நீராய் போய்விட்டது..

என் நேசத்தில் இருந்து
உன் வசம் தேடிய
என் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
இன்று நீ உதிர்த்த
வார்த்தையால்
செல்லாமல் போய்விட்டது..!

கால் கடுக்க காத்திருப்பேன்
உன் வீடு இருக்கும் வீதியில்
அளவில்லா என் அன்பை
கொண்டு..
உன்னை பார்க்கவேண்டும்
என்று ஆசையோடு!

நான் உன்னை பார்த்தும்
நீயோ எனக்கென்று பேசாமல்
இருப்பாய் வெகு நேரமாகியும்!
அக்கணமே கனமான வலியோடு
என் காலார நடந்து வீடு வந்தடைவேன்!

Tuesday, September 29, 2009

Kanniril Kathirukkum IVAL....

kaathirukiren

தெய்வத்தையும்
தேவதையும் நான்
நேரில் பார்த்து
இல்லை .
உன்னை பார்க்கும்
முன்பு வரை.
கோவிலை சுற்றிவரும்
பக்தன் போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
பறிகொடுத்த இந்த
பக்தன் மனசு
இப்பொது பரிதவிகின்றது
உன் கருணை
காட்டமாட்டாயா?
வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்........

என்னை மறந்து விட்டாயா?

என்னை மறந்து விட்டாயா?
இனி என்னை புன்னகையில் தேடாதீர்கள்
கண்ணீர்த்துளிகளில் காத்திருக்கிறேன்
கண்ணீர் மதுவாகிறது …
———————————
எழுதிப் பாருங்கள் என் போல காதலில் தோற்று ..
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்
--------------------------
நீ மனிதர்களை பாடியது போதும்.
அன்றில், மணிப்புறா, மான், .. பாடு
காதலுக்கு புல்லரித்து விடும்.
———————————————
தேயும் நிலவு, ஒழுகும் தேன்கூடு, உதிரும் மலர்
எழுதாத டைரி, எண்ணப்படாத மூளை .. இவற்றோடு நீ.
சுகிக்கப்படாதவை இப்படியே தொடருமா?
————————————————-
உன் தாலி கயிறில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

Wednesday, September 23, 2009

Yannuir Neethane!...

உன் நெஞ்சம் தொட்டுப் பேசும் என்மனமதனை...!

தான் என்னசெய்யக் காத்திருக்கிறாயோ...!!

அதனை நான் நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது...!!!

என்னுயிரிடம் நீ யாரென்று நான் கேட்ட போது...!

உன் பெயர் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டது...!!

என்னிடம் உன்னை அறிந்த நான்...!!!

என்னுயிரை நான் அறியாமல் விட்டதேனோ வென்றெண்ணி...

மெய்மறந்து வினவினேன் உன்னிடம்...!

நீயோ ! ! ! : ) : ) சிரித்தாய் (பல முறை)... ஆனால் விடையளிக்கவில்லை...?

அக்கணம் நான் உணர்ந்தேன்...

என்னுயிர் என்னை மறந்து...!

தன்னையும் மறக்கச் செய்துவிடும்...!!

ஆனால் உன்னை ஒருபோதும் மறவாதென்று...!!!

Sunday, September 20, 2009

எதிர் பார்ப்பு

புதைந்து கிடந்தா
உன் முகம்

கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................

விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............

நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................

நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................

பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................

விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................

ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.

சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

Uthadukal..

மெளனமாக‌!....
இருந்த போது....
'சந்தித்தோம்'...
பேசும்போது!...
'பிரிந்துவிட்டோமே'....

இப்படிக்கு,
"உதடுகள்"

Monday, September 14, 2009

Kathalin Unarvukal

உன் அருகாமை வெப்பத்தை
பருகி மூச்சடைத்துக் கிடக்கின்றேன்
வலியின்றி பிய்த்து போடுகின்றாய்
சிறகுகளை.
விழி அரும்பும் நீர்த்துளியென
ஆசைகள் ததுப்பி வழிய
உன் விரல் தொட்டழித்து
வெட்கத்தை ஊற்றி விடுகின்றாய்
மழையில் அழியும் தெருவோவியமாய்
கரைந்து கொண்டிருக்கின்றேன்
நாள் முழுதும்.
--*--
நீ சலனமற்று மௌனங்களை
சிந்திக் கொண்டிருக்கின்றாய்
ஒவ்வொன்றாய் சேகரித்துக்
கொண்டே இருக்கின்றேன் நான்.

எப்படி எடுத்துச் செல்வது
பிரிகையில்…!
--*--
மீன் தொட்டியிலிருந்து துள்ளி விழுந்த
சிறு மீனாய் உன் விழிகளுக்குள் விழுந்து
கிடக்கின்றது என் இரவும் பகலும். நீ
என்னை அழைத்து சென்று கொண்டே
இருக்கின்றாய் நானறியா வனமொன்றில்
வேட்டை மானனெ.

Friendship lyrics

அன்புக்கு இன்னொரு தாய்

கண்டிக்க இன்னொரு தந்தை

சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்

வழி காட்டும் இன்னொரு ஆசான்

வமபிளுக்கும் இன்னொரு சகோதரி

முகம் புதைக்க வந்த தலையணை

வருடி செல்லும் இன்னொரு தென்றல்

நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்

விமர்சிக்க ஒரு விமர்சகன்

என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி

என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி

என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி

என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி

நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்

எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்

நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை

என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்

என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை

நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்

நான் வாழ இன்னுமோர் உறைவிடம்

எனக்காக அழும் இன்னொரு வானம்

எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்

என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி

எனக்காக மட்டும் இறைவம் படைத்த

இன்னொரு உலகமே என் தோழி

Sunday, September 6, 2009

நண்பனின் கை வண்ணம்


காயத்தை விட நட்பின் வலி அதிகமா?

காயம் பட்டவனுக்கு அது ஆரும் வரை தான் வலி ஆனால்
காயப்படுத்தினவனுக்கு ஆயுள் முழுவதும் வலி....

*********************************

விழிகள் வழியாக இதயத்தில்
போர் தொடுத்து
என் காதல் சாம்ராஜ்யத்தின்
சிம்மாசனத்தை வீழ்த்தியவளுக்கு...

இந்த உலகத்தில்
என்னை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் உன் நினைவுகள்தான்
என்னை தினம் தினம் கொல்லவும் செய்கின்றன...

என் மூச்சு ஒரு நாள்
அதன் முகவரி தேடி வரும்
அப்போதாவது திறந்து வை
உன் இதயத்தின் கதவுகளை..

உன்னோடு பார்க்கவேண்டிய உலக
அதிசயங்கள் எல்லாமே எங்கே என்
அதிசயம் என்று கேக்கிறது அதற்கு
எப்படித் தெரியும் உன்னை நான்
சுற்றிச் சுற்றி ரசிப்பது...............

Saturday, August 22, 2009

மனித பிறப்பின் தத்துவம்

அன்னையின் அரவணைப்பு

தந்தையின் நல் வளர்ப்பு

அறிவு புகட்ட ஆசிரியர்கள்

நடிக்காத நட்பு

கசக்காத காதல்

கனவு நிறைந்த கல்லூரி வாழ்வு

செல்வம் சேர்க்க நல் வேலை

நிழல் போல வாழ்க்கைத்துணை

வழித்தொடர வாரிசுகள்

பொறுப்பு நிறை குடும்ப வாழ்வு

உண்மையான உறவுகள்

பகை மறந்த பந்தங்கள்

பாசமுள்ள சொந்தங்கள்

மகிழ்ச்சியான முதுமை

மலரும் நினைவுகள்

ிம்மதியான மரணம்..........

இவற்றின் முன் துன்பங்கள் அனைத்தும்

காலைப்பனி போல

உருகும் மெழுகு போல

கரைந்து விடும்......

அதனால் தான் மாண்பு மிக்கது மனித பிறப்பு...

மனித பிறப்பு

கலங்கடிக்கும் இடி மின்னல்,
காட்டாற்றுப்பெருவெள்ளம்


கொடுமை தரும் கொள்ளை நோய்கள்

சுனாமிப்பேரலை,சூறாவெளிக்காற்று


இவை யாவும் இயற்கையின் இயல்புகள்......................


களிக்க முடியாத சாதனைகள்


விலக்க முடியாத சோதனைகள்


தாங்க முடியாத வேதனைகள்


ஜீரணிக்க முடியாத நிந்தனைகள்


பயமுறுத்தும் எதிர்கால சிந்தனைகள்


இவை யாவும் வாழ்வதற்காய் வழங்கப்படும் தண்டனைகள்.............

''இன்னல் நிறைந்தது மனித வாழ்வு'' என்று தெரிந்தும் மனிதனாய்

பிறக்க தவமாய் தவமிருக்கிறது மனம்.............


எதற்காக ?..........

Thursday, August 20, 2009

காதல் கவிதைகள்

பூக்கும் பூக்களில் வாசம் இல்லை!

வீசும் காற்றில் சுவாசம் இல்லை !

உண்ணும் உணவில் சுவைகள் இல்லை !

பார்க்கும் காட்சியில் வண்ணங்கள் இல்லை !

மேகங்கள் இருந்தும் மழை இல்லை !

என்னுள் ஏன் இந்த மாற்றங்கள் என்று

தனியே அமர்ந்து யோசித்தேன்

இவையெல்லாம் ஒன்றாக கிடைத்தது

நீ பார்க்கும் பார்வையில் !

நேசிக்கின்றேன்

கண்களில் வடிகின்ற
என் கண்ணீரை விட
என் நெஞ்சினில் உறைகின்ற
என் குருதியை விட
என்னைவாழவைகின்ற
என் சுவாசத்தை விட
ஏனோ தெரியவில்லை பெண்ணே
இவற்றையெல்லாம் விட
உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்

Wednesday, August 19, 2009

இதயத்தில் அவள் பெயர்

சிந்தித்த வேலையெல்லாம்
சிந்தனையில் அவள் உருவம்
எண்ணத்தை மாற்ற என்
இதயத்தில் இடமில்லை
இதயமெல்லாம் அவள்
நினைவை நிரப்பியதால்
சுவாசித்த நேரமெல்லாம்
அவள் பெயரே ஒலித்ததடி

காத்திருக்கும் காதல்

அலைகள் தீண்ட
காத்திருக்கும் கரைகள் போல
வண்டுகள் தீண்ட
காத்திருக்கும் மலர்கள் போல
மேகங்கள் தீண்ட
காத்திருக்கும் நிலவு போல
உன் கண்கள் தீண்டும் வரை
காத்திருக்கும் என் காதல் .....

Tuesday, August 18, 2009

பெண்ணே தெரியுமா......

கவிதைக்குத் தெரியும் என்
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........

என்னவனே

யாருக்காய் திறந்து வைத்திருக்கிறாய்
காதலெனும் மன வாசலை ?
போருக்கு போன உன்னவன
நேருக்கு நேர் வரும்வரையோ ?

காதலியின் முகம்

உன் முகம்

கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................

விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............

நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................

நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................

பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................

விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................

ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.

சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

உண்மையான "நட்பு"

காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது

my dear friends..........................

அழகு இருந்தால் வருவேன் என்றது "காதல்".....

பணம் இருந்தால் வருவேன் என்றது "சொந்தம்".....

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது................."நட்பு"

........இதுவே உண்மையான் "நட்பு"......

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உய்ருள்ள வரை

Friday, August 14, 2009

காதலியின் கடை விழி பார்வை.......

உன் கண்கள் என் மனதை தாக்கும் கனையா....,
என்னை இப்படி சுட்டு விட்டதே......,
சங்கிலியால் கட்டவும் இல்லை....,
என் சட்டையை கிழிக்கவும் இல்லை......,
ஆனால் நான் பைத்தியமானேன் உன் விழியால்........

மழைக்கால காதல்

முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

*

நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

*

மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!

*

பெருமழையென முழங்கி தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!

*

இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…

மாறிய எழுத்து.........

காதலித்து பார்....கை எழுத்து அழகாகும் என்றார்கள்....
ஆனது என்னமோ உண்மை தான்....ஆனால்
என் தலை எழுத்தும் அல்லவா மாறி விட்டது...

ஆசை........

எனக்கும் ஆசை தான் காதலிக்க....
அது என்னவோ காதலுக்கு வரவில்லை....
என் மீது ஆசை.....!!!

Tuesday, August 11, 2009

நட்பு கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

Monday, August 10, 2009

உயிர் நண்பன்

விரசமில்லாமல் நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு.

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு.

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய

தோழியே!!!
நீ
ஆணாக மாறிவிடு,
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

Sunday, August 9, 2009

காதலித்துபார்

காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை

எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்
எதற்காகவும்
என்னை
தியாகம்
செய்துவிடாதே
என்றாய்.
இப்பொழுது
"எதற்காக"
என்னை
தியாகம்
செய்தாய்?

ஒவ்வொரு
முறையும்
உன் வாசலை
கடக்கும்போது
உன்
கொலுசொலி
சொல்லும்
சங்கேதம்
புரிவதில்லை
எனக்கு.

காதலால்
கசிந்துருகி
கால்கடுக்க நின்று
எவ்வளவோ
பேசினாலும்
நீ
பதிலாகத்
தரும்
மௌனத்திற்கு
அர்த்தம்
விளங்குவதில்லை
எனக்கு!
~~~~~~~~~~~~~~~

அம்மா

அன்பு நண்பர்களே:

வீட்டின் உள்ளே பாசமாக
வீட்டின் வெளியே மனசாட்சியாக
படிப்பின் பொது ஆசானாக
செயலுக்கு முன் வழிகாட்டியாக
செயலின் போது நம்பிக்கையாக
செயலுக்குப் பின் கருத்துகளாக
தவறுக்கு பின் கண்டிப்பாக
எதிரிக்கு முன் தைரியமாக
தோல்விக்கு பின் ஆறுதலாக
வெற்றிக்கு பின் பாராட்டுகளாக
எப்போதும் என்முன் கடவுளாக
என் அம்மா!!!

Saturday, August 8, 2009

காதல், காசும் வேண்டுமோ ?????

காற்றில் பறக்கும் உன் கூந்தலை கண்டால்
கடவுளுக்கே காதல் வரலாம் - இந்த
கருவாயன் மட்டும் என்ன விதி விலக்கா ..,,???

உன்மேல் காதல் கொண்டேன்
உயிரை வைத்தேன் ..,
உன்னை ஒத்துக்கொள்ளவும் வைத்தேன் ..,

காதல் என்றேன் கை கொடுதாய்
கல்யாணம் என்றேன்
காற்றுடன் மறைந்தாய்����

காதலுக்கு மட்டும்
கருவாயன் வேண்டுமாம்
கை பிடிக்க கொஞ்சம்
காசும் வேண்டுமோ ?????
_________________
♠♠with love♠♠

வாழ்த்து அட்டை!!!

நாளை பிறக்கப்போகும்
நன்நாளை வாழ்த்திட,
நேற்றே எவனோ
எதையோ எழுதிவிட்டான்..!
அவன் யாரென்றே தெரியாது..
இருப்பினும்.. கச்சிதமாய்
உன் சொந்தங்களை பாடுகிறான்..

அவன் யாரடா உன்
துணைவியை வர்ணிக்க??
அதுவும் உன் திருமண நாளில்!!

ஆனால் நீயோ..
வாழ்த்த கடன்பட்டும்,
வார்த்தைக்கு வக்கில்லாமல்..
நாடிச் செல்கிறாய்
வாழ்த்து அட்டைகளை..!

உன் துணைவியோ.. அந்த
வர்ண அட்டையின்
வசீகர வார்த்தை கண்டு
வகை வகையாய் சிரிக்கிறாள்..
வெட்கத்தில்..!

என்னவோ போ..!

அழ‌கிய‌ ரோஜா

எப்போதும் என்னவள்
உன்னை சூடுவதாலோ ,
என்னவோ..
உனக்கு இத்தனை
அழகு?

************

அழ‌கிய‌ ரோஜாவாக நீ,
ஆனால்
உன்னைச் சுற்றி எப்போதும் ,
குத்தும் முட்க‌ளாய்
உன் அன்ன‌னும், அப்பாவும்!

என் ஆழமான ''நட்ப்பு"

அழகு தேவதை போன்ற உன்னை வரைந்தேன் !
காகிதத்தில் அல்ல,
என் இதயத்தில் !

உன் கண்களில் இருந்து வந்த அம்பு
என் இதயத்தை துளைத்து விட்டது
அதனால்தான்,
என் ஆழமான ''நட்ப்பு'' உனக்கு தெரியாமல் போனது !